பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் முக்கிய அறிவிப்பு

bangladesh won sri lanka
bangladesh won sri lanka

கொவிட்-19 காரணமாக உலகக் கிண்ண 20 க்கு 20 கிரிக்கட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கட் தொடர்களை மீள் திட்டமிடுவது தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கட் சபை அவதானம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பிற்போடப்பட்டுள்ள இலங்கை அணியுடனான தொடரை மீள் திட்டமிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கட்டுடன், பங்களாதேஷ் கிரிக்கட் சபை இணக்கப்பாட்டை எட்ட முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு கிரிக்கட்டுக்கு மீள திரும்புவது என்பதும், பிற்போடப்பட்ட தொடர்களை எவ்வாறு மீள திட்டமிடுவது என்பதே தற்போதைய சவாலாக உள்ளது என பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் தலைமை அதிகாரி நிஷாமுதீன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.