கிரிக்கெட் சபையிடம் முறையிட்ட ஜோப்ரா ஆர்ச்சர் !

510474
510474

தமக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுகின்ற இனரீதியான கருத்துகள் தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக மென்செஸ்டருக்கு சென்ற சந்தர்ப்பத்தில் அவர் தமது வீட்டுக்கு சென்றிருந்தார்.

கொவிட்-19 தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அவர் குறித்த போட்டியிலிருந்து நீக்கப்பட்டதோடு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை அடுத்து அவர் மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களாக அவருக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்படுகின்றன.

அத்துடன இனரீதியான கருத்துகள் முன்வைக்கப்படுவதாக ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் முறையிட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் போட்டிகள் உற்சாகத்துடன் பங்கேற்க விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.