அரசு எந்த உதவியும் செய்யவில்லை – கூலி வேலை செய்யும் முன்னாள் கிரிக்கெட் கேப்டன்

vikatan 2020 07 704e46e8 d583 44bf 8605 c3a2a1706f0a Ed6URjUU4AALQC0
vikatan 2020 07 704e46e8 d583 44bf 8605 c3a2a1706f0a Ed6URjUU4AALQC0

இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் மாற்றுத் திறனாளியுமான ராஜேந்திர சிங் தாமி தன் வாழ்வாதாரத்திற்காக தினக்கூலியாகப் பணியாற்றுவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேந்திர சிங் தாமி, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தினக்கூலியாகப் பணியாற்றுகிறார்.

இது தொடர்பாக தாமிஅளித்துள்ள பேட்டியில், ஒரு கிரிக்கெட் தொடர் இருந்தது, ஆனால் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

அதனால் வேறு வழியில்லாமல் என் தகுதிக்கேற்ப ஏதாவது வேலை கொடுங்கள் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.

இதனையடுத்து உத்தராகண்ட் மாநில பிதோராகர் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் விஜயகுமார் ஜோக்தாந்தே, மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தாமிக்கு பண உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

தாமி தற்போது உத்தராகண்ட் வீல்சேர் அணியின் கேப்டனாவார், முடக்கு வாதத்தினால் இவர் 90% திறனை இழந்த நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.