கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐசிசி, ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் துடுப்பாட்ட தரவரிசையில் இந்திய அணி தலைவரும், அதிரடி துடுப்பாட்ட வீரருமான விராட்கோலி 871 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார்.
கடந்த வருடம் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலிலும் விராட் கோலி முதலிடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அதே அணியை சேர்ந்த ரோஹித்ஷர்மா 855 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளார்.
மூன்றாவதுஇ நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் முறையே பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டுபிளஸ்சிஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.