ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்வதற்கு முன் ஒகஸ்ட் 15ஆம் திகதி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதற்காக ஐ.பி.எல் அணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி இந்தியாவில் இருந்து புறப்பட இருக்கின்றன.
ஐக்கிய அரபு இராச்சியம் சென்றபின் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ததன் பின்னர் பயிற்சியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஆகஸ்ட் 15-ஆம் திகதியில் இருந்து இந்திய வீரர்களுக்கு மாத்திரம் பயிற்சி வழங்க சென்னை சுப்பர்கிங்ஸ் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.