ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் அணித்தலைவர் லயோயனல் மெஸ்ஸி பார்சிலோனா கிளப்பிற்காக விளையாடி வருகிறார்.
யூரோ சாம்பியன்ஸ் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொண்டது. இதில் 2-1 என பார்சிலோனா வெற்றி பெற்றது.
ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே மெஸ்ஸி கோல் அடித்தார்.
இதன் மூலம் தொடர்ச்சியாக 15 சாம்பியன்ஸ் லீக் சீசனில் குறைந்தது ஒரு கோலாவது அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன் எந்தவொரு வீரரும் இந்த சாதனையை செய்தது கிடையாது.