இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு (08) 10.30 க்கு சதம்டனில் இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியில் இருந்து இங்கிலாந்து அணியின் வீரர் ஜோஸ் பட்லர் விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களால் குறித்த போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 ஆவது இருபதுக்கு 20 போட்டியில் ஜோஸ் பட்லர் 77 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு வழி வகுத்திருந்தார்.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்;ட இந்த இருபதுக்கு 20 தொடரை இங்கிலாந்து அணி ஏற்கனவே 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.