இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், கொல்கத்தா நைட்றைடர்ஸ் அணி, 37 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
ஐ.பி.எல் தொடரின் 12 போட்டியாக டுபாயில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்றைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர், 175 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.