நடப்பு செம்பியனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஹைதராபாத் அணி

sunrisers hyderabad03 1599408819
sunrisers hyderabad03 1599408819

இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில் ப்ளே ஓப் சுற்றுக்கு, நான்காவது அணியாக சன்றைசர்ஸ் ஹைதராபாத் அணி தெரிவாகியது.

மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நேற்றிரவு சார்ஜாவில் இடம்பெற்ற போட்டியில் 10 விக்கட்டுக்களினால் வெற்றிப்பெற்றதன் மூலம் ஹைதராபாத் அணி, ப்ளே ஓப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

நேற்றைய போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்றைசர்ஸ் ஹைதராபாத் அணி, 17.1 ஓவர்களில், விக்கட் இழப்பின்றில் 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்ததது.

ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், டெல்லி கெப்பிரல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.

இதேநேரம், ப்ளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள ஏனைய இரு அணிகளான சன்றைசர்ஸ் ஐதராபாத் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி, நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணியும், ப்ளே ஓப் சுற்றின் முதல் போட்டியில் தோல்வியடைந்த அணியும், இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் இரண்டாவது அணிக்கான போட்டியில் மோதவுள்ளன.