2020ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் பிளே ஓஃப் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்நேற்று முன்தினம் லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதன்படி, லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்தது.
டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் ஹைதராபாத் மற்றும் பெங்களுர் அணிகள் 14 புள்ளிகளுடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன. இதன்மூலம் குறித்த நான்கு அணிகளும் பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.
இந்நிலையில், இன்று பிளே ஓஃப் சுற்றுஆரம்பமாகின்றது இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
அத்துடன், ஆறாம் திகதி நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மேலும், 8ஆம் திகதி இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டமும் இறுதிப்போட்டி 10ஆம் திகதியும் டுபாயில் நடைபெறவுள்ளது.