வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட127 பேருக்கு கொரோனா தொற்று !

202006270951055479 In Madurai Corona Ward 5 more people died and 194 people SECVPF 1

வவுனியாவில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் இதுவரையில் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்ககையின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடந்த ஒக்டோபர் மாதம் 1154 பேர் வவுனியா மம்பைமடு இராணுவமுகாம், பெரியகட்டு இராணுவமுகாம், வேலங்குளம் விமானபடைத்தளம், பூந்தோட்டம் கல்வியற்கல்லூரி ஆகிய நான்கு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 127 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்ககப்பட்டுள்ளனர்.

இதேவேளை 990 பேர் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், வேலங்குளம் முகாமில் மாத்திரம்; 37 பேர் வரையில் தனிமைப்படுத்தலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது