சீனாவின் சாங்சிங் நகரிலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டயோஷுயிடோங் சுரங்கத்தில், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவால், 23 ஊழியர்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது.
இதுவரை 18 ஊழியர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்ட நிலையில், அதிகப்படியான காபன் மொனோசைட் வாயுவை சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்ததாக சீன அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.