அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள 120 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கிறிஸ்த்தவ தேவாலயத்தில் நேற்றைய தினம் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
கிழக்கு கிராமத்திலுள்ள இத் தேவாயத்தில் அதிகாலை 5 மணியளவில் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இவ் விபத்தில் அங்கிருந்த கட்டிடம் முழுவதும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.