புது டெல்லியில் தொடரும் விவசாயிகளின் போராட்டம்

download 1 4
download 1 4

இந்திய தலைநகர் புது டெல்லியில் விவசாயிகள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று 11 ஆவது நாளாகவும் தொடர்கின்றன.

இந்த நிலையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நாடு தழுவிய நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புராரி மைதானத்திலும், டெல்லியின் எல்லைப்பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

விவசாயிகளை சமாதானப்படுத்த இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

5 சுற்றுகள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள போதும் இதுவரை எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

அடுத்த சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 11வது நாளாக போராட்டத்தை தொடரும் இந்திய விவசாயிகள், தங்களுக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறியுள்ளனர்.

போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பாக் இன்று விவசாய சங்க நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினர்.

இதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடு தழுவிய நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு விவசாய சங்கங்கள் கோரியுள்ளன.

இதற்கு காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு வங்கிகள் சங்கமும் ஆதரவு தெரிவித்திருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.