நாட்டில் மேலும் 649பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் 451 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 322 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 197 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்து 877 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 7ஆயிரத்து 280 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 461 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 137 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.