இந்தியாவில் பரவும் புதிய வகை நோய் தொற்று!

mohw india logo copy
mohw india logo copy

இந்தியாவில் புதிய வகை நோய் தொற்றுக்குள்ளான 140க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் எலுரூ பகுதியில் நோய் தொற்றுக்குள்ளான குறித்த 140 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நோயாளர்களாக அடையாளங்காணப்பட்டவர்கள் கண்எரிச்சல் மற்றும் தலைசுற்றுபோன்றவற்றுடன் வைத்தியசாலைக்கு வருகைதருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறித்த அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டுள்ள போதிலும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் வைரஸ் தொற்றுக்கான எவ்வாறான ஆதாரமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என ஆந்திர மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சூழல் மாசுபாடு காரணமாக அடையாளங்காணப்படாத புதிய வகை நோய் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.