அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தயாரித்து வரும் பைசர் பயோஎன்டெக் எனும் கொரோனா தடுப்பு மருந்தினை தமது மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க கனடா முன்வந்துள்ளது.
எதிர் வரும் கிழமைகளில் முதியோர்களுக்கும் சுகாதாரப் பிரிவினருக்கும் முதலில் இத்தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவிக்கின்றது.
உத்தியோகபூர்வமாக குறித்த தடுப்பு மருந்தினை பொது மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க அனுமதியளிக்கப்பட்ட மூன்றாவது நாடு கனடா ஆகும்.
இதற்கு முன் பிரித்தானியா மற்றும் பஹ்ரெய்ன் போன்ற நாடுகள் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.