அமெரிக்காவின் நிவாடா மாநிலத்திலுள்ள லாஸ் வேகாஸுக்கு வெளியே அமைந்துள்ள நெடுஞ்சாலையில் லொறியொன்று பல மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்தினை ஏற்படுத்தியதில் ஐந்து சாரதிகள் உயிரழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 20 மோட்டார் சைக்கிள்கள் குறித்த நெடுஞ்சாலையில் சவாரி செய்து கொண்டிருந்தபோது ஒரு லொறி பின்னால் சென்று மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோதலுக்குப் பின்னர் பல மணி நேரம் விபத்தினை ஏற்படுத்திய லொறி சம்பவ இடத்திலேயே இருந்ததுடன் விபத்துக்கான காரணம் என்னவென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.