ஆந்திராவில் மக்களை தாக்கும் மர்மநோயால் புதிதாக 13 பேர் பாதிப்பு!

202012110045544015 Andhra Pradesh mystery illness cases rise to 609 two SECVPF
202012110045544015 Andhra Pradesh mystery illness cases rise to 609 two SECVPF

ஆந்திராவில் மக்களை தாக்கும் மர்மநோயால் புதிதாக 13 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் மர்மநோயின் தாக்கம் குறைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள எலுரு நகரத்தில் மர்மநோய் மக்களை தாக்கி வருகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்டு ஏராளமானவர்கள் எலுரு மற்றும் விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், இந்த மர்மநோயால் புதிதாக 13 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் மர்மநோயின் தாக்கம் குறைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் மர்மநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 609 ஆக அதிகரித்து உள்ளது. மறுபுறம் இதுவரை 553 பேர் அந்த நோயின் பிடியில் இருந்து குணமடைந்து மீண்டு இருக்கிறார்கள்.