கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று இரவு 10 மணி முதல் நாளை (12) அதிகாலை 4.00 மணி வரை குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி டீன்ஸ் வீதி, டாலி வீதி உள்ளிட்ட அனைத்து குறுக்கு வீதிகள், சொக்ஷோல் வீதி, சொக்ஷோல் லேன், இப்பன்வல சந்தி தொடக்கம் கொம்பனித்தெரு வரையான பகுதிகளில் நீர்வெட்டு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.