நைஜீரியாவில் உயர்தர பாடசாலை ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

Nigeria 1
Nigeria 1

நைஜீரியாவில் உயர்தர பாடசாலை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.

வடமேல் நைஜீரியாவின் கட்சினா மாநிலத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களினால் நேற்று பிற்பகல் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், நைஜீரிய ஜனாதிபதி மொஹம்மது புகாரி குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் காணாமல் போன மாணவர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுக்குமாறும் நைஜீரிய ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.