இந்தியாவின் அஹமதாபாத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் 4 குழந்தைகளை தங்க வைத்து நன்கொடை வசூலிக்க வைத்து அவர்களை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் பரமஹம்ச நித்யானந்த தியான பீடத்தினைச் சேர்ந்த இரு பெண் சீடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில்;
நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார் என்றும், தேவைப்பட்டால் வெளிநாட்டில் இருக்கும் அவரை உரிய வழியில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குஜராத் பொலிசார் மேற்கொள்வார்கள் என்றும், இந்தியா திரும்பினால் அவரை நாங்கள் நிச்சயமாக கைது செய்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு வரையும் விசாரித்து வருதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.