கடந்த மாதம் 3ஆம் திகதி அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
எனினும் தேர்தலில் ஜோ பைடன் பெற்ற மகத்தான வெற்றியை அதிபர் டிரம்ப் ஏற்காமல் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.
இந் நிலையில் ட்ரம்ப்பின் கட்சியான குடியரசுக் கட்சி ஜோபைடனை அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக அங்கீகரித்துள்ளது.
தேர்தல் முடிந்து ஒருமாதத்திற்கு மேலான நிலையில் தாமதமாக இந்த அங்கீகாரம் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனுக்குக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.