தமிழகத்தில் இன்று 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

istockphoto 1208953647 612x612 1
istockphoto 1208953647 612x612 1

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 04 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 9,781 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 1,170 பேர் சிகிச்சைக்கு பின் வெளியேறியுள்ளனர் . இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 82 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளது.