சிலியில் பொதுவெளியில் முகக் கவசம் தொடர்பான விதிமுறையை மீறிய நபர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கும் சட்டம் அமுலிலுள்ளது.
இந் நிலையில் கடந்த மாத இறுதியில் அந் நாட்டு ஜனாதிபதியான செபாஸ்டியன் பினெரா(Sebastian Pinera) தனது சொந்த ஊரான Cachagua நகரிலுள்ள கடற்கரைக்கு சென்றபோது, அங்கிருந்த ஒரு பெண்ணின் விருப்பத்துக்காக அவருடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில் ஜனாதிபதி முக கவசம் அணியாமல் இருந்தது தெரிய வந்ததையடுத்து அவருக்கு 3500 டொலர்கள் ($3,500.0) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.