பல ஐரோப்பிய நாடுகளில் புதிய வடிவத்திலான கொரோனாத் தொற்றுப் பரவுவதால் அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் நிறுத்தி வைப்பதாக சவுதி அரேபிய நிறுவனமான சவுதியா (Saudia) அறிவித்துள்ளது.
இந்த தடை உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஒரு வார காலத்திற்கு தடை அமுலில் இருக்கும் எனவும், அதன்பின்னர் இது மேலும் நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் ரியாத்தில் சவுதியா அதிகாரிகள் தெரிவித்தனர்.