போஸ்னியா அகதிகள் முகாமில் தீ விபத்து!

1608739440132055

போஸ்னியா (Bosnia) நாட்டிலுள்ள அகதிகள் முகாமில் நேற்றைய தினம் தீ விபத்தொன்று நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்நாட்டின் வட மேற்கு பகுதியின் பிஹாக் என்ற நகரிலுள்ள குறித்த அகதிகள் முகாமில் சுமார் 1, 200 பேர் தங்கி இருந்ததாகக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடுமையாக போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இச் சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றனர்.