என்மீது குற்றம் சாட்டுவது என்பது காலத்திற்கு பொருந்தாத விடையம் – பிள்ளையான்

114004620 pillayan03
114004620 pillayan03

என்மீது குற்றம் சாட்டுவது என்பது காலத்துக்கு பொருந்தாத விடையம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை (23) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்க முக்கியஸ்தர்களுடன் பேசியிருக்கின்றேன் . இந்த விடையத்தை விரைவாக முடித்து சுமூகநிலைக்கு கொண்டு வந்து பாரம் பெரியமான கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுப்போம் என நான் நம்புகின்றேன் இந்த பணியை முன்னின்று செய்வதற்கு தயாராக இருக்கின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மட்டக்களப்பு மேச்சல்தரைக்கு அன்றுதான் வந்துள்ளார். அவர் பிள்ளையான், வியாழேந்திரன் என்ன செய்கின்றார்கள் என பேசுவது மிகவேடிக்கையானது.

எனவே நான் அவரிடம் கேட்கின்றேன் நீங்கள் 20 வருடமாக நாடளுமன்ற உறுப்பினராக இருக்கின்றீர்கள் வன்னி மாவட்டத்தில் நீங்கள் செய்த பணி என்ன ? மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள் என எனக்கு தெரியவில்லை? இந்த வன்னி மாவட்டத்தில் பல ஏழைகள் உட்பட பல பிரச்னைகள் இவற்றை நீங்கள் தீர்த்துவைக்கவும். எங்கள் பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைக்கின்றோம்.

அரசியலுக்காக இங்கு வந்து யாரும் பேசவேண்டிய தேவை கிடையாது. எங்களுடைய மக்களை இந்த மண்ணை நம்பி வாழுகின்ற மக்களை காப்பாற்றி முன்னுக்கு கொண்டுவரவேண்டிய பொறுப்பு, கடமை எங்களுக்கிருக்கின்றது ஆகவே நாங்கள் தலைமை ஏற்றுச் செய்வோம் அரசாங்கத்துடன் பேசுவோம்.

நீங்கள் சொல்லுவதற்காக நாங்கள் அரசாங்கத்துடன் முரண்பட்டு வெளியேறுகின்ற நிலை வராது என நம்புகின்றேன். அதேவேளை இது தொடர்பாக இப்போது வந்த புதிய அரசாங்க நாடளுமன்ற உறுப்பினராக நான் இன்று இருக்கின்றேன் என்பதற்காக என்மீது குற்றம் சாட்டுவது என்பது காலத்துக்கு பொருந்தாத விடையம் என தெரிவித்துள்ளார்.