சர்வதேச ரீதியில் ஒரே நாளில் 4.81 லட்சம் பேருக்கு கொரோனா

உலக அளவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 81 ஆயிரம் பேருக்குக் கொரோனாத் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கினறன.

இதில் ஒரு லட்சத்து 81 ஆயிரம் பேருடன் அமெரிக்கா முதலிடத்திலும், பிரித்தானியா 2ஆம் இடத்திலும் உள்ளன. அங்கு நேற்று மாத்திரம் 41 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதில் திடீர் திருப்பமாக ரஷ்யாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.