நாதுராம் கோட்சேவை ‘தேச பக்தர்‘ என்று புகழ்ந்த பிரக்யாசிங்கை பாதுகாப்பு அமைச்சகத்துக்கான பாராளுமன்ற ஆலோசனை குழுவில் இருந்து நீக்குவதாக பா.ஜனதா கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
நடப்பு குளிர்கால கூட்டத்தொடரின்போது, பா.ஜனதா கட்சி உறுப்பினர்களின் நடப்பு குளிர்கால கூட்டத்தில் பிரக்யாசிங் கலந்து கொள்ள அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரக்யாசிங்;
”புரட்சியாளர் உத்தம்சிங்கை அவமதித்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் நான் அந்த கருத்தை தெரிவித்தேன். சில நேரங்களில் பொய் புயல் பெரிதாக தோன்றும். ஆனால், அந்த புயலில் மக்கள் மயங்கி விடக்கூடாது” என டுவிட்டர் தளத்தினூடாக விளக்கமளித்துள்ளார்.