கால்நடை மருத்துவ பெண் எரித்து கொலை!!

fire
fire

இந்தியாவின் ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா ரெட்டி என்பவர் வைத்தியசாலையில் இருந்து மோட்டார் வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் வண்டி பழுதாகியுள்ளது. இந்நிலையில் குறித்த வழியில் சென்று கொண்டிருந்த லொறி வாகன ஓட்டுநரும் இதன் போது உதவி செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தனது வீட்டாருக்கு அறிவித்து தனது வீட்டாருடன் பேசிக்கொண்டிருந்த வேளையில் திடீரென அலைபேசி துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் வீட்டார் பிரியங்காவை குறித்த இடத்தில் வந்து பார்த்த வேளையில் அவரை காணவில்லை.

இந்நிலையில் ஹைதராபாத் – பெங்களூர் பகுதியில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடைத்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

குறித்த சடலம் தொடர்பான பிரேத பரிசோதணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.