நேற்று முன்தினம் பாராளுமன்ற மக்களவையில், பிரக்யா சிங் தாக்கூர் நாதுராம் கோட்சேவை ‘தேச பக்தர்‘ என்று புகழ்ந்தமைக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
நேற்றைய தினமும் அவரது கருத்துக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனையடுத்து பிரக்யா சிங் பாதுகாப்பு அமைச்சகத்துக்கான பாராளுமன்ற ஆலோசனை குழுவில் இருந்து நீக்குவதாக பா.ஜனதா கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கோட்சே குறித்து தெரிவித்த கருத்துக்கு பிரக்யா சிங் தாக்கூர் இன்று மக்களவையில் மன்னிப்பு கோரியுள்ளார்.
கோட்சேவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய அவர், ‘நான் தெரிவித்த கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.