முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்ணடனைக்குட்பட்டுள்ள நளினி தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாழ்ந்து விட்டதாகவும், பல ஆண்டுகள் விடுதலைக்காக போராடி விடுதலை கிடைக்கவில்லை என்பதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதத்தை நேற்று முதல் மேற்கொண்டு வருகின்றார்.
நளினி மனு அளித்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள சிறைச்சாலை அதிகாரிகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தெரிவிக்க மறுத்து விட்டனர்.
ஓரிரு நாட்களில் நளினியை சட்டத்தரணி புகழேந்தி சிறைச்சாலை சென்று சந்திக்கவுள்ளதாகவும் நளினியை சந்தித்து பேசிய பின்னர் தான் முழுமையான தகவல் வெளிவரும் என தெரிவிக்கப்படுகிறது.