இலங்கை – இந்தியாவிற்கிடையிலான உறவு மேம்படுத்தப்படும் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;
இலங்கை – இந்தியாவிற்கிடையிலான உறவு மேம்படுத்தப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அதற்காக இரு நாட்டு உறவுகளை அதிகளவில் மேம்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வரவேற்பை ஏற்று இந்தியா சென்றுள்ள கோத்தாபய ராஜபக்ஷவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இராணுவ வரவேற்பளிக்கப்பட்டது.