சூடான் நாட்டில் பழங்குடியினர் இடையே இடம்பெற்ற மோதலில் 83 பேர் பலி!

202101180147288965 Tamil News Tamil News 83 killed in fighting in Sudan Darfur SECVPF
202101180147288965 Tamil News Tamil News 83 killed in fighting in Sudan Darfur SECVPF

சூடான் நாட்டில் பழங்குடியினர் இடையே இடம்பெற்ற மோதலில் 83 பேர் உயிரிழந்துள்ளனர்.

சூடானின் தார்பூர் நகரில் ஐ.நா. சபை மற்றும் ஆபிரிக்க யூனியனின் 13 ஆண்டு கால அமைதி காக்கும் திட்டம் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து ஆயுத படையினரை திரும்பப் பெறுவது என முடிவானது. இது இடம்பெற்று 2 வாரங்களில் அந்நாட்டின் பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அல் ஜெனீனா நகரில் மசாலித் என்ற பழங்குடியின குழுவினருக்கும் அராப் பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட வன்முறையில், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த வன்முறை சம்பவத்தில் பழங்குடியினரில் 83 பேர் கொல்லப்பட்டனர். இதில் சில ஆயுத படை அதிகாரிகள் உட்பட 160 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.