பிரியங்கா கொலை விவகாரம்- நால்வர் கைது

priyanka
priyanka

இந்தியாவின் ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் லொறி வாகன ஓட்டுநர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தவர் பிரியங்கா ரெட்டி கடந்த 27ம் திகதி தனது மோட்டார் வாகனம் பழுதடைந்த நிலையில் அவ்வழியே சென்ற வாக ஓட்டுநர் உட்பட நால்வர் உதவி செய்வதாக கூறி பிரியங்காவை கடத்திச்சென்று கற்பழித்து கொடூரமாக எரித்துக்கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் நால்வரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார்.