இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சசிகலா!

Sasikala 1200
Sasikala 1200

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பான அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு வைத்தியசாலையிலிருந்தவாறே  சசிகலா கடந்த புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்போது சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலும் குறைந்துள்ளதாகவும் ஒக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி அவர் தொடர்ந்து நல்ல முறையில் சுவாசிப்பதாகவும் வைத்திய சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சசிகலா இன்று வைத்தியசாலையிலிருந்து  வெளியேறுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பெங்களூரில் ஓய்வெடுக்கும் சசிகலா, பெப்ரவரி 3 அல்லது 5ஆம் திகதி  தமிழகம் திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.