ஒரு இலட்சத்து 28 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை!

covid 19 swab test positive 1
covid 19 swab test positive 1

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 190 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 377 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 166 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 255 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 94 சதவீதமாக இருந்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒருவர் பலியானார். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,537 ஆக இருந்து வருகிறது. தற்போது உடல்நலக்குறைவால் 50 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகரித்து வருகிறது.