இலங்கையரை அச்சுறுத்திய பிரியங்கவிற்கு இங்கிலாந்தில் தண்டனை!!

priyanka
priyanka

2018ஆம் ஆண்டு பிரிட்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்திய குற்றத்துக்கு இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு தண்டனை வழங்கி லண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

பிரிகெடியர் பிரியங்க பெர்ரனாண்டோவுக்கு 2500 ஸ்ரேலிங்க் பவுண்ட் தண்டம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்பளித்தது.

பின்னணி;

2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்தன்று இங்கிலாந்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை கழுத்தறுப்பது போன்று சைகை மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ அச்சுறுத்தியிருந்தார்.