ஓமனில் ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா ​தொற்று உறுதி!

image 3 2
image 3 2

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 369 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 896 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று மட்டும் 353 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 491 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 93.4 சதவீதமாக உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நேற்று யாரும் பலியாகவில்லை. இதனால் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 1,583 ஆக இருந்து வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 80 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.