தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் வைத்தியர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரும் சுட்டுக்கொள்ளப்பட்டதற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர சட்ட சபையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசுகையில்;
இந்த நடவடிக்கைக்காக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், பொலிஸாருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரண்டு மகள்களின் தந்தை என்ற முறையிலும், ஒரு கணவராக, ஒரு சகோதரராக ஹைதராபாத் சம்பவம் என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது.
திரைபடத்தில் ஹீரோ என்கவுண்டர் செய்தால் கை தட்டி பாராட்டுகிறார்கள்.அதை நிஜ வாழ்க்கையில் செய்தால் கேள்வி எழுப்புகிறார்கள்.
பெண்களுக்கு எதிராக குற்றங்களில் 3 வாரங்களுக்குள் தண்டனை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வழக்குகளை விரைந்து விசாரிப்பதை உறுதி செய்யவும் குற்றவாளிகளுக்கு தக்க தண்டணை வழங்கிடவும் சட்ட மசோதா விரைவில் சட்டசபையில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.