பாடசாலை மாணவன் விபத்தில் உயிரிழப்பு

pakirathan
pakirathan

வவுனியா – சிதம்பரபுரம் வன்னிகோட்டம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவனொருவன் தனியார் பேருந்துடன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற இவ் விபத்தில் உயிரிழந்தவர் (புண்ணியகுமார் பகிரதன்) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவன் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவன் ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.