பொருளாதார நிபுணர்கள் அபிஜித் விநாயக் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரெமர் ஆகியோர் இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சுவீடனில் நடந்த நோபல் பரிசளிப்பு விழாவில் இந்தியப் பாரம்பரிய உடையணிந்து தமக்கான நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டனர்.
அபிஜித் விநாயக் பானர்ஜி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார். அதேபோல, அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ சேலை அணிந்து கொண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார்.