இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் இலங்கையர் மூவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பிலான வழக்கு நேற்றைய தினம் டுபாய் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கடந்த மே மாதம் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக அந்நாட்டு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதற்கமைய குறித்த மூவரும் கைது செய்யப்பட்டிருந்னர்.
இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள மூவரும் தமது நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மாத்திரம் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 22ம் திகதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.