தமிழர்களுக்கு இந்தியா துரோகம் இழைத்துள்ளது என்கிறார் ஸ்டாலின்

202003301206431608 DMK gave 1 crore to CM Relief fund for corono prevention SECVPF
202003301206431608 DMK gave 1 crore to CM Relief fund for corono prevention SECVPF

இலங்கைக்கு எதிரான பிரேரணையில், இந்திய அரசாங்கம் வெளிநடப்பு செய்தமையானது, உலகத் தமிழர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பாரிய துரோகமாகும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவிககின்றார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் நாட்டில் தேர்தல் என்ற காரணத்தினாலேயே, இந்திய அரசாங்கம் வெளிநடப்பு செய்துள்ளதாகவும், இல்லாவிடின் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவே வாக்களித்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை, தமிழர்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.