இந்தியாவில் தீப்பற்றி எரிந்த வைத்தியசாலை; 6 பேர் பலி

download 1 31
download 1 31

இந்தியாவின்-மும்பை பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை ஒன்றிலே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவல் ஏற்படும் பொழுது வைத்தியசாலையில் 70 பேர் சிகிச்சை பெற்று வந்ததுடன், தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.