ஒரே நாளில் பிரேசிலில் 3600க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

2754miroramcoro 4
2754miroramcoro 4

பிரேசிலில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 86 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 26 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 3,668 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3 இலட்சத்து 17 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.10 கோடியைக் கடந்துள்ளது. தொற்று பாதிப்புடன் 12.70 இலட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர்.

இதன்மூலம் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது