பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் கொரோனாவால் 296 பேர் பலி!

Corona Death 2
Corona Death 2

பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 045 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 51 இலட்சத்து 87 ஆயிரத்து 879 ஆக உள்ளது.

ஒரே நாளில் 296 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,00,073 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 40 இலட்சத்தை கடந்துள்ளது. சுமார் 10.79 இலட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.