ஆந்திர மாநிலத்தில் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசாங்கம் திருத்தத்தினை மேற்கொண்டுள்ளது.
அதனடிப்படையில் இதுவரை காலமும் 65 வயதினை கடந்த முதியவர்கள் மற்றும் விதவைகளுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தினை மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் முதியவர்களுக்கான ஓய்வூதிய வயது 65ல் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.