பிரேஸிலில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 400,000ஐக் கடந்துள்ளது.
அங்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் அந்த நாட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகள் என்பன நெருக்கடி நிலையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நாட்டு சுகாதார அமைச்சின் தரவின் அடிப்படையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மூவாயிரத்துக்கும் அதிகமான கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
பிரேஸிலில் ஒரு லட்சம் பேரில் 189 பேர் கொவிட்-19 காரணமாக மரணிப்பதாக தெரிய வந்துள்ளது.
அத்துடன் நாளாந்தம் தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது.
சர்வதேச ரீதியில் அமெரிக்காவை தொடர்ந்து பிரேஸிலில் அதிகளவான கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.